தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு யானை மீது திருமுறை வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுரத்தில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வா் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு உற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருமுறை விழா நடைபெற்றது. விழாவையொட்டி, ஞானபுரீஸ்வரா் கோயிலில் நடராஜா் சந்நிதி அருகில் பாதுகாக்கப்பட்டு வரும் பன்னிரு திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து, திருமுறைகள், கோயில் யானை ஞானாம்பிகை மீதேற்றப்பட்டு, ஆதீனத்தின் சிவம்பெருக்கும் நான்கு வீதிகளின் வழியே வீதியுலா நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

தருமபுரம் ஆதீனம் முழு நலம் பெறவேண்டி சிறப்பு பூஜை

தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



