திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கல்லீரல், கணைய சிகிச்சைக்கு ரூ. 27 லட்சம் வரை அனுமதி

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் கல்லீரல், கணைய சிகிச்சைக்கு ரூ. 27 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்.

Updated On :12 மே 2013, 6:22 am IST

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் கல்லீரல், கணைய சிகிச்சைக்கு ரூ. 27 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்.

வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வரின் விரிவான காப்பீடுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கிவைத்து அமைச்சர் மேலும் பேசியது:

உடல் நலத்தை பேணுவதில் கவனக்குறைவும், தயக்கமும் மக்களிடையே அதிகமாக உள்ளது. குறிப்பாக, கிராமப்புற பெண்கள் தங்களின் உடல்நிலை சார்ந்த பிரச்னைகளை வெளியில் சொல்ல தயங்கும் நிலை தொடர்கிறது. இதனால் கர்ப்பப்பை வாய் புற்று போன்ற நோய்களுக்கு காலத்தில் சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டுதான் அரசே மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. இதை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முகாமுக்கு நாகை மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஆசியா மரியம் தலைமை வகித்தார்.

வேதாரண்யம் எம்எல்ஏ என்.வி. காமராஜ், தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவர் தமிழ்வாணன், வட்டார மருத்துவ அலுவலர் ராசசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ, ஊரக நல இணை இயக்குநர் கிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சண்முகராஜ், வட்டாட்சியர் ராம்குமார், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் வாசுதேவன், ஆத்மா குழுத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் காளிதாசன், ஊராட்சித் தலைவர் வனிதா நாகப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் ரத்த தானம் அளித்த 10 பேருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.