நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவ சப்பர பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவம் கடந்த 3-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா கொடியேற்றம் மே 4-ம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில், வெவ்வேறு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு வசந்த உத்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, அம்பாள் மகாலெட்சுமி அலங்காரத்தில் சின்ன யானை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை இரவு ஓலை சப்பர பவனி நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் அம்பாள் ஓலை சப்பரத்தில் காட்சியளித்தார். பாரம்பரிய முறைப்படி, வழக்கமான வீதிகளில் ஓலை சப்பரம் வலம் வந்து நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
செடில் உத்சவம்: பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் விழா மற்றும் செடில் உத்சவம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டமும், மாலையில் செடில் உத்சவமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Very Good Nature! முதல்வர் விஜய்யை பாராட்டிய காதர் மொய்தீன்! | TVK

பெங்களூரு: தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்றதற்காக ஐவர் கைது!

உதயசந்திரன், அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

திருமாவளவனிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
