கீழ்வேளூர் அருகே உரிய சொத்து வரி ஆவணங்கள் இன்றி பயறு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
நாகை ஒழுங்குமுறை விற்பனை பிரிவு அதிகாரிகள் கீழ்வேளூர் பகுதியில் சோதனைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லாரியை சோதனையிட்டதில் அதில் 198 மூட்டை பயறு மூட்டைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 57 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. மேலும் பயறு மூட்டைகளுக்கான சொத்துவரி செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட எவ்வித ஆவணங்களும் ஓட்டுநரிடம் இல்லை. இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






