தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்கான நடவடிக்கைகளில் சிறப்பாக பங்காற்றியவர்கள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

சமூக நீதிக்கான நடவடிக்கைகளில் சிறப்பாக பங்காற்றியவர்கள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் கல்வி மேம்பாடு, வாழ்க்கைத் தரம் உயர்வு மற்றும் பொருளாதார உயர்வுக்கு பாடுபட்டவர்களுக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்படுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்கள், கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட சமூக நீதிக்கான பணிகள் மற்றும் சாதனைகளுக்கான ஆவணங்களை இணைத்து, பெயர், சுய விவரம் மற்றும் முழு முகவரியுடன் நவ. 10-ஆம் தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com