கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து,  மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:17 am

DIN

மத்திய அரசைக் கண்டித்து,  மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் வட்டச் செயலாளர் சி. மேகநாதன் தலைமையில், கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னையில் கட்சிக் கொடி  அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்,  இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வா. சிங்காரவேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் து. கணேசன், எம். மணி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலார் பி. மாரியப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியப் பொருளாளர் கங்காதரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டச் செயலாளர் ஏ. அறிவழகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.
பின்னர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் மத வெறியைத் தூண்டுவதாகக் கூறி, பிரதமர் உருவப் பொம்மையை எரித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.