அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேதாரண்யம்: 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத் துறையில் ஜவுளிக்கடை உள்ளிட்ட மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் புத்தாடைகளை

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:14 pm

DIN

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத் துறையில் ஜவுளிக்கடை உள்ளிட்ட மூன்று கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் புத்தாடைகளை மர்ம நபர்கள்  திருடிச் சென்றிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் தோப்புத்துறை வடமழை ரஸ்தா பகுதியில் ஜவுளிக் கடை, டிராவல்ஸ் முகமை உள்ளிட்ட மூன்று கடைகள் அடுத்தடுத்துள்ளன.
இந்த கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது வியாழக்கிழமை காலை தெரியவந்தது. கடைகளின் உரிமையாளர்கள் உள்ளே சென்றுபார்த்தபோது  ரூ. 20 ஆயிரம் ரொக்கம், ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள ஜவுளிகள்,  மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்கள் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல்  நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். நாகையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.