மனைவியைக் கொன்ற கணவர் கைது

நாகப்பட்டினத்தில் மனைவியைக் கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

நாகப்பட்டினத்தில் மனைவியைக் கொன்ற கணவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகை அருகேயுள்ள வடகுடி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் கலையரசன் (39). இவரது மனைவி தனலட்சுமி (37). கலையரசன் தனது மனைவி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அம்மிக்கல்லால் தனலட்சுமியை தாக்கினாராம். இதில் தனலெட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து கலையரசனை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com