15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

நாகூரில் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

சிறுமி ஆஷிபா மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி நாகூர் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:54 am IST

சிறுமி ஆஷிபா மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி நாகூர் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகூரில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவின் மரணத்துக்கு உரிய நீதி வழங்க வேண்டும், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. நிர்வாகி மைதீன் நகுதா தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சுல்தான் கலிபா, அனஸ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று, சிறுமியின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.