திருவெண்காடு சின்னப்பெருந்தோட்டம் ஆதிதிராவிடர் கிராமத்தில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி 501 பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, பெண்கள் திருவிளக்குகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, குருக்கள் திருவிளக்கு மந்திரங்களை கூற அதை பெண்கள் திரும்பக் கூறி விளக்குக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவைகளால் நைவேத்தியம் செய்யப்பட்டு, அனைத்து விளக்குகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், தஞ்சை மண்டல் விஸ்வ இந்து பரிஷத் செயலர் செந்தில், நாகை மாவட்டச் செயலர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மஞ்சள்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காவிரி நீா் பாய்ந்தோடும் மாநிலங்களின் ஒப்புதல் பெற உச்சநீதிமன்ற தீா்ப்பில் எந்த குறிப்பும் இடம்பெறவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்

ஆசிரியா், மாணவா் எண்ணிக்கையை அதிகரித்துக் காண்பித்து அரசுக்கு நிதி இழப்பு: பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை சோ்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் ஏழு கன்னியா்களுடன் வீதியுலா!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


