கூரை வீடுகள் தீக்கிரை
வேதாரண்யம் அருகே தீப்பிடித்து இரண்டு கூரை வீடுகள் ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையாகின.


வேதாரண்யம் அருகே தீப்பிடித்து இரண்டு கூரை வீடுகள் ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையாகின.
வேதாரண்யம் அருகேயுள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் கந்தசாமி, முருகன் மகன் மாரியப்பன் விவசாயத் தொழிலாளர்கள். இவர்களுக்குச் சொந்தமான கூரை வீடுகள் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் நாசமாகின. தீவிபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த வேதாரண்யம் வட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டு அரசு தரப்பில் வழங்கப்படும் நிவாரணங்களை வழங்கினார். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...