புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேதாரண்யம் - வாய்மேடு சாலையில் பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

நாகை மாவட்டம், வேதாரண்யம் - வாய்மேடு நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் அளவில் உள்ள பள்ளங்களை  சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:52 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் - வாய்மேடு நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் அளவில் உள்ள பள்ளங்களை  சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் - வாய்மேடு (திருத்துறைப்பூண்டி) பிரதான சாலையானது மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட தொடர் மழையின்போது இந்த சாலையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தார்ச் சாலை உறுதித்தன்மையை இழந்தது. இதனால் ஏற்பட்ட பள்ளங்கள் இதுநாள் வரை முறையாக சீரமைக்கப்படவில்லை. ஆனால், தார்ச் சாலையை சீரமைக்க ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் வரை காத்திருக்காமல்,  ஆபத்தான பள்ளங்களையாவது தாற்காலிகமான முறையிலாவது சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.