வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தேசிய நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Updated On :9 ஜூலை 2018, 1:54 am

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
சீர்காழி - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சட்டநாதபுரம் கம்பன்நகர் அருகே சாலையோரம் பெரிய புளியமரம் பட்டுபோன நிலையில் பல மாதங்களாக உள்ளது. எந்நேரமும் முறிந்து சாலையில் விழலாம் என்ற அச்சத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். சீர்காழியிலிருந்து திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த பட்டுபோன மரத்தை கடந்து செல்லவேண்டும். 
மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.