திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தேசிய நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 1:54 am

DIN

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
சீர்காழி - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சட்டநாதபுரம் கம்பன்நகர் அருகே சாலையோரம் பெரிய புளியமரம் பட்டுபோன நிலையில் பல மாதங்களாக உள்ளது. எந்நேரமும் முறிந்து சாலையில் விழலாம் என்ற அச்சத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். சீர்காழியிலிருந்து திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த பட்டுபோன மரத்தை கடந்து செல்லவேண்டும். 
மேலும், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.