கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வனமகோத்ஸவ வார விழா நிறைவு

நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள சுபம் வித்யாமந்திர் பப்ளிக் பள்ளியில் வனமகோத்ஸவ வார விழா அண்மையில் நிறைவடைந்தது.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:55 am

DIN

நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள சுபம் வித்யாமந்திர் பப்ளிக் பள்ளியில் வனமகோத்ஸவ வார விழா அண்மையில் நிறைவடைந்தது.
இப்பள்ளியில் வனமகோத்ஸவ விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. நிகழ்ச்சியை சுபம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி தாளாளர் ஹர்ஷாசுதேஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியில் பள்ளியின் பசுமைக்குழு சார்பில், வனப் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. 2-ஆம் நாள் பசுமைப்புரட்சி குறித்து ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. 3-ஆம் நாள் வனங்களின் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியரின் மாறுவேட போட்டிகள் நடைபெற்றன. 4-ஆம் நாள் வினா- விடை போட்டிகளும், 5-ஆம் நாள் சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 6-ஆம் நாள் நிறைவில் சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் தலைமையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் சுதேஷ்ஜெயின் முன்னிலை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.