தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி

நாகை மாவட்டம், பொறையாறு ராஜம்பாள் தெருவிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 18-ஆம் ஆண்டு தேர் பவனி மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :23 ஜூலை 2018, 5:41 am IST

நாகை மாவட்டம், பொறையாறு ராஜம்பாள் தெருவிலுள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் 18-ஆம் ஆண்டு தேர் பவனி மற்றும் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அதன்படி, மிக்கேல் ஆண்டவர், தேவமாதா, குழந்தை ஏசு, செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆகிய சொரூபங்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
முன் வரிசையில் பெண்கள் பழங்கள், இனிப்பு வகைகள், புடவைகள், வளையல்கள் அடங்கிய சீர்வரிசை பொருள்களை சுமந்து வந்தனர்.
ராஜம்மாள் தெரு, மொய்தீன் தெரு, மரைக்காயர் வீதி உள்ளிட்ட வீதிகளின் வழியாக பேண்டு வாத்தியங்கள் முழங்க பாடல்களை பாடிக்கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, ஆலயத்தில் நிர்வாகி மைக்கேல்ராஜ் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
இதில், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பொறையாறு காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.