நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதுகுறித்து நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் படைக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 28 வயதுக்குள்பட்ட, 10-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள் வரையிலான நிலைகளில் கல்வி பயின்ற ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்குத் தேர்வுப் பெறுவோருக்கு மாத ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். பணிக்கான விண்ணப்பங்களை மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்திலிருந்து நேரடியாக பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று, சாதிச் சான்று ஆகியவற்றின் நகல்களையும், 3 மார்பளவு புகைப்படங்களையும் இணைத்து, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நேரு யுவகேந்திரா, நெ.27/28 சட்டையப்பர் தெற்குவீதி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரில் சமர்பிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









