சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

நேரு யுவகேந்திரா தொண்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 

Updated On :23 ஜூலை 2018, 5:47 am IST

நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் பணிக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். 
இதுகுறித்து நாகை மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு : நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் படைக்கு சமூகப் பணியில் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 28 வயதுக்குள்பட்ட, 10-ஆம் வகுப்பு முதல்  முதுநிலை பட்டதாரிகள் வரையிலான நிலைகளில் கல்வி பயின்ற ஆண், பெண் இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்குத் தேர்வுப் பெறுவோருக்கு மாத ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும். பணிக்கான விண்ணப்பங்களை மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்திலிருந்து நேரடியாக பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று, சாதிச் சான்று ஆகியவற்றின் நகல்களையும், 3 மார்பளவு புகைப்படங்களையும் இணைத்து, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் நேரு யுவகேந்திரா, நெ.27/28 சட்டையப்பர் தெற்குவீதி, நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரில் சமர்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.