வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை: பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கண்டனம்

சீர்காழியை அடுத்த கொள்ளிடம் கடைமடைப் பகுதி பாசன வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராத பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Updated On :23 ஜூலை 2018, 5:48 am IST

சீர்காழியை அடுத்த கொள்ளிடம் கடைமடைப் பகுதி பாசன வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராத பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொள்ளிடம் பகுதி கடைமடைப் பாசனப் பகுதியில், தெற்கு ராஜன் வாய்க்கால்,புதுமண்ணியாறு மற்றும் பொரை வாய்க்கால் ஆகிய பிரதான வாய்க்கால்களும், 500-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வாய்க்கால்களும் வெட்டப்படாததால், புதர் மண்டியும், மண்ணால் தூர்ந்தும் காணப்படுகின்றன. இதன் காரணமாக வாய்க்கால்களில் தண்ணீர் வந்தாலும், பாசனத்துக்கு எளிதில் சென்றுசேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு சம்பா நெற்பயிர் சாகுபடிக்கு பாசன வசதிக்காக காத்திருக்கிறது. இதனிடையே, வாய்க்கால்களைத் தூர்வாருமாறு விவசாயிகள் தரப்பில் பொதுப்பணித்துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது, மேட்டுர் அணையிலிருந்து தண்ணிர் திறந்து விடப்படுள்ள சூழலில், வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், தண்ணீர் கொள்ளிடம் கடைமடைப் பகுதிக்கு சென்றுசேருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மாதிரவேளூர் காமராஜ் கூறுகையில்,  கடைமடைப்பகுதியான கொள்ளிடம்  பகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக தூர்வார வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.