சீர்காழி அருகே கடந்த 4 ஆண்டுகளாகப் பழுதடைந்த சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகேயுள்ள மாதிரவேளூர் கிராமத்திலிருந்து பாலுரான்படுகை, பட்டியமேடு, உச்சிமேடு, பனங்காட்டாங்குடி மற்றும் வடரெங்கத்துக்குச் செல்லும் சாலை 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தடுமாறிக் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இந்த தார்ச் சாலை மேம்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதைச் சீரமைக்குமாறு பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் காமராஜ் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

