ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதல்: பாலிடெக்னிக் மாணவர் சாவு

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதியதில், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

News image
Updated On :14 மே 2018, 11:56 pm

DIN

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதியதில், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
பூம்புகார் அருகேயுள்ள பல்லவனம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரகுவேலன் (22). இவர் திருக்கடையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ரகுவேலன் தனது இருசக்கர வாகனத்தில் பூம்புகாரை அடுத்த மேலையூரில் இருந்து பல்லவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பல்லவனம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த சுற்றுலா பேருந்து திடீரென ரகுவேலனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, சுற்றுலா பேருந்து நிற்காமல் சென்றது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பவுன்ராஜ், பாரதி ஆகியோர் ரகுவேலன் இறந்து கிடப்பதைக் கண்டு, அமரர் ஊர்திக்குத் தகவல் கொடுத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட சுற்றுலா பேருந்தைப் பிடிக்குமாறு திருவெண்காடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள காவல்நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில், திருவெண்காடு காவல் ஆய்வாளர் வேலுதேவி மற்றும் போலீஸார் அந்தப் பேருந்தை மடக்கிப் பிடித்தனர். இதனிடையே, ரகுவேலனின் சடலத்தைப் பார்த்து அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். அவர்களுக்கு அமைச்சர் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆறுதல்
கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.