மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா பைகளை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

Updated On :15 மே 2018, 12:00 am

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா பைகளை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.
திருவெண்காடு அருகேயுள்ள கீழமூவர்க்கரையைச் சேர்ந்தவர் சரவணன் (32). மீனவர். இவர் ஞாயிற்றுக்கிழமை தனக்குச் சொந்தமான ஃபைபர் படகில், மோகன்ராஜ் (23), பெருமாள் (45), எல்லப்பன் (55), தங்கதுரை (45) ஆகியோருடன் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, வலையில் 10 நெகிழிப் பைகள் சிக்கின.
அவற்றை திங்கள்கிழமை காலை கரைக்குக் கொண்டு வந்த மீனவர்கள், திருவெண்காடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், காவல் ஆய்வாளர் வேலுதேவி உள்ளிட்ட போலீஸார், பைகளைச் சோதனை செய்ததில், 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பைகள் நாகை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுதொடர்பாக கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.