செம்பனார்கோவில் அருகேயுள்ள எருமல் கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.வி. பாரதி, எஸ். பவுன்ராஜ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினர்.
செம்பனார்கோவில் ஒன்றியம், எருமல் காந்தி நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் புருஷோத்தமன், நாகராஜ், திருவாதுரை, வரதராஜன், செல்வராஜ் மற்றும் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ பி.வி. பாரதி நிகழ்விடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தனது சொந்த செலவில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5,000 மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.
அப்போது, எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், வைத்தீஸ்வரன்கோவில் பேருர் கழகச் செயலாளர் போகர்ரவி, கூட்டுறவு வங்கித் தலைவர் கபாடி பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

