இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா பைகளை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

Updated On :15 மே 2018, 12:00 am

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகே கீழமூவர்க்கரையில் மீனவர்களின் வலையில் சிக்கிய கஞ்சா பைகளை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.
திருவெண்காடு அருகேயுள்ள கீழமூவர்க்கரையைச் சேர்ந்தவர் சரவணன் (32). மீனவர். இவர் ஞாயிற்றுக்கிழமை தனக்குச் சொந்தமான ஃபைபர் படகில், மோகன்ராஜ் (23), பெருமாள் (45), எல்லப்பன் (55), தங்கதுரை (45) ஆகியோருடன் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, வலையில் 10 நெகிழிப் பைகள் சிக்கின.
அவற்றை திங்கள்கிழமை காலை கரைக்குக் கொண்டு வந்த மீனவர்கள், திருவெண்காடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், காவல் ஆய்வாளர் வேலுதேவி உள்ளிட்ட போலீஸார், பைகளைச் சோதனை செய்ததில், 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பைகள் நாகை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுதொடர்பாக கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.