வேதாரண்யத்தில் அரசுப் பேருந்தில் பயணிகளிடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விட்ட நடத்துநர் திங்கள்கிழமை இரவு தாக்கப்பட்டார்.
வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செளரிமுத்து (38). இவர் வேதாரண்யம் - நாகப்பட்டினம் செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வேதாரண்யத்தில் இருந்து நாகை புறப்பட்ட பேருந்தில் பணியில் இருந்தார். பேருந்து, நாகை சாலையில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆண் பயணிகள் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விடச் சென்றார்.
அப்போது, தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பயணிகள் சௌரிமுத்துவை தாக்கியதில் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சௌரிமுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

ரூ. 3.85 லட்சம் திருடியதாக இனிப்பக ஊழியா் கைது
பழைய காரை இணையதளம் மூலம் விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி: இளைஞா் கைது
தில்லி, ஹரியாணா, பஞ்சாப், உ.பி. உள்பட 5 மாநிலங்களில் காா் திருட்டு மோசடி: 10 போ் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

