நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புத்தூரில் புளியமரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில், இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் கிராமம், கதிர்வேல் செட்டியார் தெருவைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி பாலு மகன் விதன் (21). இவர் கடலூரிலிருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், சிதம்பரம்- சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி எதிரே உள்ள புளியமரத்தில் அவரது இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த விதன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

