/

வைத்தீஸ்வரன்கோயிலில் ஆவணி கிருத்திகை சிறப்பு வழிபாடு: தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் தரிசனம்

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் ஆவணி  கிருத்திகை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் பங்கேற்றார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:10 am

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் ஆவணி  கிருத்திகை சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் பங்கேற்றார்.
முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியப் பொடி, பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 51 வகையான திரவியங்களைக் கொண்டு, சிறப்பு அபிஷேகம் சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது. தொடர்ந்து, நவரத்தின ஆபரணங்கள், மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அருள்பிரசாதங்களை வழங்கினார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.