நாகை மாவட்டம், சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபுட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலுக்குக் காரணமான நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தலின்பேரில், தனிப்படை போலீஸார் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில், சீர்காழி அருகே உள்ள திருநகரி- வருஷபத்து பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தலா 650 மி.லி. அளவுகொண்ட 120 மதுபுட்டிகளும், தலா 180 மி.லி. அளவுகொண்ட 240 மதுபுட்டிகளும் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அதைக் கடத்தி வந்த காரைக்கால் சொக்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சு. தங்கபிரகாஷை (46) கைது செய்து, சீர்காழி மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

