நாகை மாவட்டம், சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபுட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலுக்குக் காரணமான நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தலின்பேரில், தனிப்படை போலீஸார் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில், சீர்காழி அருகே உள்ள திருநகரி- வருஷபத்து பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தலா 650 மி.லி. அளவுகொண்ட 120 மதுபுட்டிகளும், தலா 180 மி.லி. அளவுகொண்ட 240 மதுபுட்டிகளும் இருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அதைக் கடத்தி வந்த காரைக்கால் சொக்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சு. தங்கபிரகாஷை (46) கைது செய்து, சீர்காழி மதுவிலக்குப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

