98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றக் கூட்டம்

நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:13 am

நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவர் செம்மலர் வீரசேனன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுந்தரய்யா, மாவட்ட துணைச் செயலாளர் தங்க. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: நூலகத் தந்தை சீர்காழி எஸ்.ஆர். அரங்கநாதனின் நினைவாக சீர்காழியில் கிளை நூலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மற்றும் கருத்துரிமை, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் அடக்குமுறையை பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டாரப் பொருளாளர் துரைமுருகன் வரவேற்றார். பிரபாகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.