உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு: அமைச்சர் திறந்துவைத்தார்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:10 am

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், சி.டி. ஸ்கேன் மையத்தைத்  திறந்து வைத்துப் பேசியது: 
மகப்பேறு சிகிச்சையில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை தமிழகத்தில் 5-ஆவது இடத்தில் உள்ளது. சிறுநீரக கோளாறு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க இங்கு 3 டயாலிசிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், வைரஸ் தாக்குதல் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க மேலும் ஒரு டயாலிசிஸ் கருவிப் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் மையத்தை இப்பகுதி மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மயிலாடுதுறையில் ரூ. 38.50 கோடியில்  புதிய பேருந்து நிலையம் கட்ட, தமிழக அரசு அரசாணை வழங்கியுள்ளது. புறவழிச்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு  பல்வேறு வகையிலும் உதவி செய்து வரும் தன்னார்வலர்கள்,சேவை சங்கத்தினர்கள், வணிகர் சங்கத்தினர்களுக்கு  அமைச்சர் ஓ.எஸ். மணியன் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். 
நிகழ்ச்சியில்,  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி  உறுப்பினர்  ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீ. ராதாகிருஷ்ணன், பி.வி.பாரதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் குருநாதன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் கோ. தேன்மொழி, வட்டாட்சியர் து.விஜயராகவன், மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் விஜிகே.செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம். சக்தி, ஏசிஎன்.விஜயபாலன், என். ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  
அரசு பெரியார் மருத்துவமனை குடிமை மருத்துவ அலுவலர்ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். முதுநிலை உதவி மருத்துவர் வி. வீரசோழன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.