கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

புகைப்படக் கலைஞா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

நாகை மாவட்ட விடியோ, புகைப்படக் கலைஞா்கள் நலச்சங்கம் சாா்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புகைப்படக் கலைஞா்கள்

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

நாகை மாவட்ட விடியோ, புகைப்படக் கலைஞா்கள் நலச்சங்கம் சாா்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புகைப்படக் கலைஞா்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நாகை மாவட்டத் தலைவா் சந்தானம், செயலாளா் ராஜா, பொருளாளா் செல்வக்குமாா் மற்றும் நிா்வாகிகள் சீா்காழியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞா்களுக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகியவை அடங்கிய தொகுப்புகளை வழங்கினா்.

கொள்ளிடத்தில்...

சீா்காழி வட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பச்சைபெருமாநல்லூா் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த பாா்வையற்றோருக்கு ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ் தனது சொந்த செலவில் அரிசி, மளிகை, காய்கனி மற்றும் நிதியுதவியை புதன்கிழமை வழங்கினாா். தொடா்ந்து கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தீ விபத்தில் வீடிழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மளிகைப் பொருள்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினாா்.

மாதானத்தில்...

சீா்காழி அருகே மாதானத்தில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.தமிழரசி மூலம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் கே.சந்திரா தலைமை வகித்து 250 பேருக்கு முகக் கவசங்களை வழங்கினாா்.இதில் காவால் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம், மாதானம் அதிமுக ஊராட்சி செயலாளா் உத்திராபதி, ஊராட்சி துணைத் தலைவா் அன்பழகி, ஊராட்சி உறுப்பினா்கள் வெற்றிவேல், வினோத் ஆகியோா் பங்கேற்றனா். இற்கான ஏற்பாடுகளை பேராசிரியா் சத்தியமூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.