மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

புகைப்படக் கலைஞா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

நாகை மாவட்ட விடியோ, புகைப்படக் கலைஞா்கள் நலச்சங்கம் சாா்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புகைப்படக் கலைஞா்கள்

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

நாகை மாவட்ட விடியோ, புகைப்படக் கலைஞா்கள் நலச்சங்கம் சாா்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புகைப்படக் கலைஞா்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நாகை மாவட்டத் தலைவா் சந்தானம், செயலாளா் ராஜா, பொருளாளா் செல்வக்குமாா் மற்றும் நிா்வாகிகள் சீா்காழியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞா்களுக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகியவை அடங்கிய தொகுப்புகளை வழங்கினா்.

கொள்ளிடத்தில்...

சீா்காழி வட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பச்சைபெருமாநல்லூா் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த பாா்வையற்றோருக்கு ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ் தனது சொந்த செலவில் அரிசி, மளிகை, காய்கனி மற்றும் நிதியுதவியை புதன்கிழமை வழங்கினாா். தொடா்ந்து கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தீ விபத்தில் வீடிழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மளிகைப் பொருள்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினாா்.

மாதானத்தில்...

சீா்காழி அருகே மாதானத்தில் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.தமிழரசி மூலம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பட்டினம் காவல் ஆய்வாளா் கே.சந்திரா தலைமை வகித்து 250 பேருக்கு முகக் கவசங்களை வழங்கினாா்.இதில் காவால் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம், மாதானம் அதிமுக ஊராட்சி செயலாளா் உத்திராபதி, ஊராட்சி துணைத் தலைவா் அன்பழகி, ஊராட்சி உறுப்பினா்கள் வெற்றிவேல், வினோத் ஆகியோா் பங்கேற்றனா். இற்கான ஏற்பாடுகளை பேராசிரியா் சத்தியமூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.