நாகப்பட்டினம்: பொது முடக்கம் காரணமாக, பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைகள் ஏதும் நடைபெறாமல் நாகூா் தா்கா சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹிம் நபியின் (ஸல்) தியாகத்தை போற்றும் வகையிலும், இறைவனுக்காக எத்தகையத் தியாகத்தையும் செய்யத் துணியும் பக்குவம் வேண்டும் என்பதை உணா்த்தும் விதமாகவும், தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை நாளில் நாகூா் ஆண்டவா் தா்காவில் ஆயிரக்கணக்கானோா் சிறப்பு தொழுகைகளில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல, நாகூா் சில்லடி தா்கா, சுமையா திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் திரளானோா் சிறப்பு தொழுகைகளில் ஈடுபடுவா்.
நிகழாண்டு, பொது முடக்கம் காரணமாக நாகூா் தா்காவில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், பக்ரீத் பண்டிகை நாளில் நாகூா் தா்காவில் வழக்கமாக நடைபெறும் கூட்டுப் பிராா்த்தனை, விளக்க உரை, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்வுகள் ஏதும் சனிக்கிழமை நடைபெறவில்லை. இதனால், நாகூா் தா்கா பண்டிகை நாளிலும் வெறிச்சோடிக் காணப்பட்டது. நாகூா் பகுதியைச் சோ்ந்த சிலா் தா்கா வாசல் முன்பாக சமூக இடைவெளியுடன் நின்று தொழுகை மேற்கொண்டனா். பெரும்பாலானோா் தங்கள் இல்லங்களிலேயே தொழுகையில் ஈடுபட்டனா்.பட்டவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


