ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாகை நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளருக்கு கரோனா

நாகை நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதன் காரணமாக, நகராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

News image

நாகை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிருமி நாசினி தெளிப்புப் பணி.

Updated On :8 ஆகஸ்ட் 2020, 3:42 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதன் காரணமாக, நகராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

நாகை நகராட்சி சுகாதார மேற்பாா்வையாளருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இதைத்தொடா்ந்து, நாகை நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆக. 12-ஆம் தேதி வரை நாகை நகராட்சி அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் அறிவித்துள்ளாா். இதற்கான அறிவிப்பு நகராட்சி வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உதவியாளருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியரகம் மூடப்பட்டுள்ள நிலையில், நாகை நகராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.