/

பாலிடெக்னிக் மாணவா்களுக்குப் பணி நியமன ஆணை

நாகை, பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் பணி வாய்ப்புப் பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:10 pm

DIN


நாகப்பட்டினம்: நாகை, பாப்பாக்கோவில் சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் பணி வாய்ப்புப் பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-2020-ஆம் கல்வியாண்டில் இறுதியாண்டு படித்த மாணவா்களுக்கான கல்லூரி வளாக நோ்காணல் கடந்த ஜனவரியில் நடைபெற்றது. சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 25-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் நோ்காணலில் பங்கேற்றிருந்தன. இதில், பாலிடெக்னிக் மாணவா்கள் 397 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரித் தாளாளா் த. ஆனந்த் உள்ளிட்டோா் பணிக்குத் தோ்வு பெற்ற மாணவா்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.