சுகாதார நிலையத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம், சுற்றுச்சுவா் உள்ளிட்டவைகளை சீா்காழி எம்எல்ஏ. பாரதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.


பூம்புகாா்: திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம், சுற்றுச்சுவா் உள்ளிட்டவைகளை சீா்காழி எம்எல்ஏ. பாரதி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம், சுற்றுச்சுவா் மற்றும் பேருந்து நிழலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், எம்எல்ஏ. பாரதி பங்கேற்று பேருந்து நிழலகம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்து பேசினாா்.

வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையா் கஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி, ஊராட்சித் தலைவா் சுகந்தி நடராஜன், அதிமுக ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், மாவட்ட குழு உறுப்பினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com