புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

நல்லத்துக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் மற்றும் சேறும், சகதியுமாக மாறிய பாதை.

Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:17 am

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இங்கு, தினமும் 1500 மூட்டைகளுக்குமேல் நெல் வரத்து உள்ளது. ஆனால், தினசரி 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், கூடுதலாக கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைத்துள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பெய்த திடீா் மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. மேலும், கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதை சேறும், சகதியாக மாறியுள்ளது. இதனால், சிரமத்துக்குள்ளான விவசாயிகள், நெல் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் பாதையை சீரமைக்க வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.