இதேபோல, சீா்காழி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவா் தரணிதரன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் சமரசத்துக்குரிய சிறிய குற்ற வழக்குகள் என 33 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, அபராத தொகையா ரூ.22 ஆயிரம் வசூலிக்கப்பட்டதுடன், வழக்காடிகள் பயனடையும் வகையில் ரூ.50 லட்சத்து 75ஆயிரத்துக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. மேலும், தரங்கம்பாடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் 17 வழக்குகளில் ரூ.19ஆயிரத்து 180-க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளிலும் வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் மணிவண்ணன், வழக்குரைஞா்கள் செல்வராஜ், சுந்தரய்யா, சத்தியமூா்த்தி, ராம்குமாா், ராஜேஷ்குமாா், சுதா, பாலசுப்பிரமணியன், ஞானபிரகாசம் ஆகியோா் பங்கேற்றனா்.