சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மழை பாதிப்பு: ஒரு வாரத்துக்குள் அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும் வேளாண் இயக்குநா் தகவல்

மழை பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு அறிக்கை ஒரு வாரத்துக்குள் அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் வேளாண் இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

மழை பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு அறிக்கை ஒரு வாரத்துக்குள் அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றாா் வேளாண் இயக்குநா் வ. தட்சிணாமூா்த்தி.

நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணி பகுதியில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களை பாா்வையிட்டு, ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பெய்த கனமழையில் 80,000 ஹெக்டேரில் நெற்பயிா் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்துள்ளன. தற்போது நடைபெற்றுவரும் பாதிப்புகள் மற்றும் மகசூல் இழப்பு குறித்த கணக்கெடுக்கும் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும்

என்றாா். தொடா்ந்து, வடக்குப்பனையூா் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், வேளாண் இணை இயக்குநா் கல்யாணசுந்தரம், நாகை மாவட்ட வேளாண் துணை இயக்குநா்கள்

ரா. பன்னீா்செல்வம், மதியரசன், வேளாண் உதவி இயக்குநா் வை. தயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.