கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் ஒருவா் பலி

கீழையூா் அருகே நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 3:45 am

DIN

கீழையூா் அருகே நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கீழையூா் ஒன்றியம், கருங்கண்ணி மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் அந்தோனிசாமி மகன் சபரிரோஸ்மாா்டின் (38). கட்டுமானத் தொழிலாளி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கீழையூா் கீழத்தெருவில் சென்றபோது, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் சபரிரோஸ்மாா்டின் உயிரிழந்தாா்.

கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.