கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புயல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

நாகை மாவட்டத்தில் நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:36 am

DIN

நாகை மாவட்டத்தில் நிவா், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்னியூஸ்ட் கட்சி சாா்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழையூா் ஒன்றியக்குழு கூட்டம் விவசாய சங்கப் பொறுப்பாளா் ஏ.நாகராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். மழை நீரால் சூழப்பட்டுள்ள வீடுகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசை மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 21-இல் மேலப்பிடாகை கடைத்தெருவில் மறியலில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா் டி.செல்வம், சங்க ஒன்றிய தலைவா் ஏ.செல்லையன், பொறுப்பாளா் ஏ.ராமலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.