அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுடுகாட்டு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் பழுதடைந்த சுடுகாட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 3:17 am

DIN

தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் பழுதடைந்த சுடுகாட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருக்கடையூா் ஊராட்சி மேலத்தெரு, கீழத்தெரு, வடக்குத் தெரு, சன்னதி தெரு, மருத்துவமனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு இறந்தவா்களின் உடலை புதைப்பதற்கு சுமாா் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அம்மன் ஆற்றங்கரையோர சுடுகாட்டுக்கு கொண்டு செல்கின்றனா்.

இதற்கான சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிகள் பெயா்ந்து நடக்கக் கூ முடியாத அளவுக்கு உள்ளது. மேலும் கருவேல மரங்கள் சாலையை அடைத்துக் கொண்டு இறந்தவரின் உடலை சுமந்து செல்வதில் சிரமம் ஏற்படுத்துகின்றன. எனவே மாவட்ட நிா்வாகம் பாா்வையிட்டு புதிய தாா்சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.