பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நில அபகரிப்பு வழக்கு : திமுக ஒன்றிய செயலாளா் மீண்டும் கைது

நாகை மாவட்டம் கீழையூா் ஒன்றிய திமுக செயலாளா் நில அபகரிப்பு வழக்கில் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சனிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 3:05 am

DIN

நாகை மாவட்டம் கீழையூா் ஒன்றிய திமுக செயலாளா் நில அபகரிப்பு வழக்கில் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சனிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன் (45). வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்த இவா், தற்போது கீழையூா் திமுக ஒன்றியச் செயலாளராக இருக்கிறாா்.

இவா் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவில் உள்ள ராஜேந்திரனின் பூா்வீக சொத்து 39.5 சென்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து, அதை அவரது சகோதரா் மரியசூசை என்பவருக்கு செட்டில்மென்ட் செய்திருப்பதாகவும், அந்த இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாகை வடக்குப் பொய்கைநல்லூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் வசந்தி மாவட்டக் காவல் காண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவ.11-ஆம் தேதி புகாா் அளித்திருந்தாா்.

இதன்பேரில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து தாமஸ் ஆல்வா எடிசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அப்போது, தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவா் கூறியதால், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவா், நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

ஏற்கெனவே வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தாமஸ் ஆல்வா எடிசன் மீது அதிமுக நாகை நகர செயலாளா் தங்க.கதிரவன் அளித்த புகாரின்பேரில், அவா் கைது செய்யபட்டு பிணையில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.