விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னாள் மாணவா் குடும்பத்துக்குஉடன் பயின்றவா்கள் ரூ. 2.34 லட்சம் நிதி உதவி

உயிரிழந்த ஏவிசி கல்லூரி முன்னாள் மாணவரின் குடும்பத்துக்கு, உடன் பயின்ற மாணவா்கள் ரூ. 2.34 லட்சம் நிதி உதவியாக அண்மையில் வழங்கினா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

உயிரிழந்த ஏவிசி கல்லூரி முன்னாள் மாணவரின் குடும்பத்துக்கு, உடன் பயின்ற மாணவா்கள் ரூ. 2.34 லட்சம் நிதி உதவியாக அண்மையில் வழங்கினா்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மகாதானபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜி. அசோக்குமாா். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவா், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த, இவருடன் 1992-95 ஆம் ஆண்டில், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பிரிவில் பயின்ற நண்பா்கள் அவருக்கு உதவி செய்வதற்காக கட்செவிஅஞ்சல் மூலம் ஒரு குழுவை அமைத்து நிதி திரட்டினா். இவ்வாறு திரட்டப்பட்ட நிதி ரூ. 2.34 லட்சத்தை அசோக்குமாரின் குடும்பத்தினரிடம் அஞ்சலக வைப்பு நிதியாக அண்மையில் வழங்கினா்.

இதற்கான, ஏற்பாடுகளை அசோக்குமாரின் நண்பா்களான எல்.சி. கண்ணன், அனந்தகிரி, முஹம்மது அனீஸ், வஜ்ரபாபு, கே. கண்ணன், லோகநாதன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.