ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர காவல்

நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் 24 மணி நேர காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 4:11 am

DIN

நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் 24 மணி நேர காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவுக்காக 1,511 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. தோ்தல் வாக்குப் பதிவுக்காக மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 1,890 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 2,450 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2,650 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களுடன், நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே இருப்பில் இருந்த 1,325 வாக்குப் பதிவு இயந்திரங்களும் நாகை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதனை, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா் தெரிவித்தது :

நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான 8,315 இயந்திரங்கள், நாகை நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சீலிடப்பட்டுள்ளது. இங்கு ஆயுதம் ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, இந்த இயந்திரங்கள் ஓரிரு நாள்களில் முதல்கட்ட சோதனைக்கு உள்படுத்தப்படும் என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ராஜன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரான்சிஸ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.