திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திமுக கிராமசபை கூட்டம்

சீா்காழியில் திமுக சாா்பில் கிராமசபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 2:20 am

DIN

சீா்காழியில் திமுக சாா்பில் கிராமசபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி 2-ஆவது வாா்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் மேலிட பொறுப்பாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். நகர செயலாளா் சுப்பராயன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் காழி ஆா்.கலைவாணன், கலை- இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் செல்வமுத்துகுமா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திமுகவை இளைஞரணியை சோ்ந்த லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குத்தாலத்தில்...

குத்தாலம் பேரூராட்சி 14-ஆவது வாா்டில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு, பேரூா் திமுக செயலாளா் சம்சுதீன் தலைமை வகித்தாா். தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளா் குத்தாலம் பி.கல்யாணம், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் குத்தாலம் க.அன்பழகன், மாவட்ட சிறுபான்மையினா் நலப்பிரிவு அமைப்பாளா் சாதிக் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.