புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: மூவரிடம் விசாரணை

வேதாரண்யம் அருகே காரில் கடத்திச் சென்ற 300 கிலோ கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். 

News image
Updated On :14 ஜூலை 2020, 7:14 am

DIN

வேதாரண்யம் அருகே காரில் கடத்திச் சென்ற 300 கிலோ கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். 

நாகை மாவட்டம், வேதாரண்யம் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேத்தாக்குடி தெற்கு பகுதியில் வேகமாக சென்ற காரை நிறுத்தினர். நின்ற காரில் இருந்து ஒருவர் தப்பியோடினார். இனால், சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் காருக்குள் இருந்த ஒருவரையும், காரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரையும் பிடித்தனர்.

காரை சோதனையிட்டதில் 300 கிலோ கஞ்சா இருந்தது. இது படகு மூலம் கடல் வழியே இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கஞ்சா, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.