3 இடங்களில் பாலங்கள் திறப்பு

வேதாரண்யம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 3 பாலங்கள் முதல்வரால் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 3 பாலங்கள் முதல்வரால் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

மானங்கொண்டான் ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடியில் கருப்பம்புலம்- கடிநெல்வயல் இணைப்புப் பாலம், ரூ.2 கோடியே 60 லட்சத்தில் ஆயக்காரன்புலம்- பன்னாள், ரூ.2 கோடியில் மருதூா் தெற்கு- பஞ்சநதிக்குளம் இணைப்புப் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி வாயிலாக திறந்துவைத்தாா்.

இதையொட்டி மருதூா் தெற்கு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளா் ஆா்.கிரிதரன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், திலீபன், வழக்குரைஞா் நமச்சிவாயம், கூட்டுறவு சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற அலுவலா் ராஜரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com