ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வேதாரண்யம் அருகே சூறைக்காற்றுடன் மழை

வேதாரண்யம் அருகே கடலோரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பலத்த சூறைக் காற்றுடன் இடியுடன் கூடிய மழைப் பொழிந்தது.

News image

வேதாரண்யம் அருகே சூறைக்காற்றுடன் மழை

Updated On :28 ஜூலை 2020, 9:15 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலோரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பலத்த சூறைக் காற்றுடன் இடியுடன் கூடிய மழைப் பொழிந்தது.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் பரவலாக மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்த மழைப்பொழிவுக்கு முன்பாக கடலோரப் பகுதியை சார்ந்த வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் வடமேற்கு திசையில் இருந்து பலத்த சூறைக்காற்று வீசியது. 

சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்ததோடு, வைக்கோல் போர்கள், கூரைகள் பாதிக்கும் அளவில் இருந்தது. இந்த காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இந்த பகுதியில் மழையின் அளவு அதிகமாக உணரப்பட்டன. காற்றின் காரணமாக வட மழை மணக்காடு கடைவீதியில் பல ஆண்டுகளாக உள்ள பெரிய ஆலமரத்தில் பெயர்ந்த ராட்சத கிளை செவ்வாய்க்கிழமை காலையில் பிரதான சாலை பகுதியில் விழுந்தது.

இதில் அந்த பகுதியில் இருந்த இரண்டு கடைகள் சேதமடைந்தன. மழையின் காரணமாக மின் விநியோகம் அவ்வப்போது பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.