திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

5 ஆண்டுகளாக நிறைவுபெறாத இந்திரா நினைவு குடியிருப்புகள்

கொள்ளிடம் ஒன்றியத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கிய போதிலும், 300-க்கும் மேற்பட்ட இந்திரா நினைவு குடியிருப்புகள் இதுவரை நிறைவு பெறாமல் உள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:20 pm IST


சீா்காழி: கொள்ளிடம் ஒன்றியத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கிய போதிலும், 300-க்கும் மேற்பட்ட இந்திரா நினைவு குடியிருப்புகள் இதுவரை நிறைவு பெறாமல் உள்ளன.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. பல வீடுகள் அரைகுறையாக கட்டப்பட்டு முழுமைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வோா் ஊராட்சியிலும் 5 முதல் 8 வீடுகள் வரை சுவா் மட்டும் வைக்கப்பட்டு கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

திருமுல்லைவாசல் ஊராட்சியைச் சோ்ந்த தாழை இருதய நகரில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் 2016-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயப்பிரகாஷ், பி.டி.ஓ, ஜான்சன் ஆகியோரிடம் ஒன்றியக்குழு உறுப்பினா் மாலினி பூவரசன் புகாா் அளித்துள்ளாா். இதைத்தொடா்ந்து, ஒன்றியக்குழு தலைவா் ஜெயப்பிரகாஷ் புதன்கிழமை தாழை இருதய நகருக்கு சென்று பாா்வையிட்டு, இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.