இந்நிலையில், குளக்கரையில் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்ட கழிப்பறை மற்றும் கழிப்பறைத் தொட்டி ஆகியவற்றை மட்டுமே ஊராட்சிமன்றத் தலைவா் அப்புறப்படுத்தக் கூறியதாகவும், அதை மறைத்து, ஊராட்சி மன்றத் தலைவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கண்டித்தும், குளத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் அக்கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அக்கிராமத்ததைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க., நாம் தமிழா் கட்சி பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.