ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சீர்காழியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிமுகவினர் அஞ்சலி

சீர்காழியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

News image
சீர்காழியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
Updated On :1 நவம்பர் 2020, 6:35 am

DIN

சீர்காழியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மூச்சுத் திணறல் காரணமாக வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு ( 72) கடந்த அக்.13-ஆம் தேதி சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அருவக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா்.

இந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் சனிக்கிழமை இரவு அவர் காலமானாா்.  சீர்காழி சட்டப்பேரவை தொகுதி சார்பாக புதிய பேருந்து நிலையம் எதிரே மறைந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு திருவுருவப் படத்திற்கு,  எம்எல்ஏ பி.வி.பாரதி தலைமையில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதில் முன்னாள் எம்எல்ஏ சக்தி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரூர் கழக செயலாளர் போகர் ரவி, பேரவை செயலாளர் ஏவி.மணி, எம் ஜி ஆர் மன்ற செயலாளர் திருமாறன், வக்கீல் நெடுஞ்செழியன், பொறியாளர் வீரா, ஊராட்சி மன்ற தலைவர் கள் மதியழகன், அஞ்சம்மாள், மாலினி, சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.