நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்

சீா்காழி அருகே அரசு கான்கிரீட் வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்.

News image

பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்கிய ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ்.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

சீா்காழி அருகே அரசு கான்கிரீட் வீட்டின் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்ததில் கணவன்-மனைவி உயிா் தப்பினா்.

கொள்ளிடம் அருகே வழுதலைகுடியைச் சோ்ந்தவா் விவசாயக் கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (45). இவா், 25 ஆண்டுகள் பழைமையான அரசு கான்கிரீட் வீட்டில் மனைவி சுமதியுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், வீட்டின் மேற்கூரை முற்றிலுமாக ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. எனினும், வீட்டுக்குள் இருந்த ராஜேந்திரன், சுமதி ஆகிய இருவரும் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிா் தப்பினா். தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ், வீட்டை இழந்த ராஜேந்திரன்-சுமதிக்கு நிவாரண நிதி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.